அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

இலங்கை பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சு


இலங்கை பெண்களின் ஆயுட்காலம் 78 வயது வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
  
சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான காரணம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரசவங்களில் 99 வீதமானவை வைத்தியசாலைகளில்  இடம்பெறுகின்றமையும் தொற்றா நோய்களை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் குதிரை ஓடியவர் கைது; பரீட்சாத்திக்கு ஆயுள் தடை?


க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் குதிரை ஓடிய ஒருவர் நேற்று அம்பிலிபிட்டிய துன்கம மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை 9.15 மணியளவில் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி மேற்படி பரீட்சை மண்டபத்தில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நபர் நேற்றுக் காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர் உடனடியாக குட்டிகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த பரீட்சாத்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிலவேளை குறித்த பரீட்சார்த்திக்கு ஆயுள் முழுவதும் எதுவித பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடைசெய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

விண்கற்கள் பொழிவினை காணலாம்


இலங்கையின் வான்பரப்பில் இந்த நாட்களில் விண்கற்கள் பொழிவினை காணலாம் என்று இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாலை மற்றும் காலை நேரங்களில் விண்கற்கள் பொழிவதை தெளிவாக காணலாம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

அல்குர்ஆன் மனனம் மூலம் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தமைக்காக அரச மரியாதை வழங்கி கௌரவிப்பு




சவுதி அரேபியாவில் கடந்த ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு இன்று அரச மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் றிப்தி மிஸிரியா தம்பதிகளின் மூத்த புதல்வாரன ஹாபிஸ் முஹம்மத் றிஸ்கான் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரியின் மாணவரான இவர் கடந்த 2012.08.09 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதால் நடாத்தப்பட்ட ஆல்குர்ஆன் மனனப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டு  சவூதி அறேபியாவின் மக்கா நகரில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் ஒருவாரகாலம் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாணவர்கள் நால்வரில் ஒருவரான றிஸ்கான் 15 வயதிற்குட்பட்டோருக்கான மேற்படிப்போட்டியில் 83 நாட்டு மாணவர்களுடன் போட்டியிட்டு சர்வதேச ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு சர்வதேச ரிதியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்த இவருக்கு இன்று (12.12.2012காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஜனாதிபதியின் வேண்டுகோலின் பெயரில் புத்தசாசன மற்றும் மதவிவகார பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மௌலானாமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் றபீக் இஸ்மாயில்உதவிப்பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன்மேல்மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாள் நக்கீப் மௌலானா,மாணவனின் உஸ்தாதுகளான அல்ஹாபில் மௌலவி எம்.இஸட்.எம்.மஸ்ஊத்றிஸ்கானின் தந்தை முகமட் றிப்திதாயார் மிஸிரியாசகோதரி பாத்திமா சமீலா உட்பட பல பிரமுகர்கள் விமா நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஹாபிஸ் முஹம்மத் றிஸகான் விமா நிலையத்திலிருந்து அரச அமைச்சரின் தலைமையில் அரச மரியாதையுடன் தனது அறிவு இல்லமான கொழும்பு மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு அங்கும் மேல்மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலானாபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பெரியபள்ளிவாசல் நிருவாகிகள்,மத்ரஸா அதிபர் உஸ்தாத் ஏ.டபிள்யு.எம்.றியாழ்உப அதிபர் உஸ்தாத் அலி ஹஸனி மற்றம் நிருவாகிகள்மத்ரஸாவின் சக மாணவர்கள்ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள்,புத்திஜீவிகள்மார்க்க அறிஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Al-Quran-hifl7
Al-Quran-hifl9
Al-Quran-hifl3
Al-Quran-hifl1
Al-Quran-hifl12
Al-Quran-hifl11
Al-Quran-hifl10
Al-Quran-hifl6
Al-Quran-hifl8
Al-Quran-hifl4
Al-Quran-hifl2
Al-Quran-hifl5

அட்டாளைச்சேனை பாலமுனைப் பகுதியில் இளம் குடும்ப பெண் தூக்கில் - மரணத்தில் சந்தேகம்



அம்பாறை மாவட்டம்-பாலமுனை கிராமத்தில் இளம் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் .

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் இளம் குடும்பப் பெண் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மாலை 13-12-2012  மாலை 04 மணிக்கு அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாது- தூக்கில் தொங்கிய பெண் பர்வின் வயது (26) சம்மாந்துறை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்இவர் சுமார் மூன்று மாதங்களாகவே அல்-ஹிதாயா பள்ளி வீதிபாலமுனை- 01ம் பிரிவில் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டு தனது நான்கு வயது மகனும்தாயாருடனும் வாழ்ந்து வந்ததாகவும்இவருடைய கணவன் றுமைஸ் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அவருடைய புதிய வீட்டு நிர்மான வேலையும் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் வேவைலையாட்கள் அங்கிருந்து வெளியாகும்  போது வீட்டில் இருந்து யாரும்  வெளிய வராததால்  பக்கத்து வீட்டில் இருந்து வந்த  பெண்  உள்ளே சென்று பார்த்தபோதே தூக்கில் தொங்கி இருக்கும் விடையம் அறிய முடிந்தது எனவும், அதனைத்தொடர்ந்து பொலிசார் அங்கு வந்து  நிர்மாண வேலை செய்தவர்களை விசாரணை செய்து மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி உரிய இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிசாரால் தகவல் கூறப்பட்டு இது வரை சடலம் எடுக்கப்பட வில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருவதுடன் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து இலங்கையர் உட்பட 26 பேர் கைது


இந்தோனேசியாவிலிருந்து படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர் ஒருவர், 21 ஆப்கானிஸ்தானியர்கள், 4 பாகிஸ்தானியர்களே இந்தோனேசியாவின் துமாய் ராவோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
.

பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு சம்பந்தன் அச்சப்படுகின்றார்: ஜனாதிபதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அவர்களை சந்தித்து பேசுவதற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் பேச்சுக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்



site counter