அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

இன்று ஒரு தகவல்(பக்கம்)

மருந்து வாங்கும் போது நாம் கவனிக்கப்பட வேண்டியவை !!

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம். மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள் வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதய நோயை தடுக்க தக்காளி மாத்திரை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு காரணமாக சீரான ரத்த ஓட்டம் இன்மையால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க மருந்து மாத்திரைகள், உணவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இருதய நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தக்காளி மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிற தோலில் 'லிகோபின்' என்ற ரசாயன பொருள் உள்ளது.

அதன்மூலம் தக்காளி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தமணி ரத்தக் குழாயில் படியும் கொழுப்பை அகற்றி அவற்றை விரிவடைய செய்கிறது.

இதன்மூலம் ரத்த ஓட்டம் சீராகி மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இந்த மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் இருதய நோயாகளிகள் பாதிப்பின்றி வாழ முடியும். மற்றவர்களுக்கு இருதய நோய் ஏற்படாது. இருதய நோய்க்கு மட்டுமின்றி நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

அடைமழை காரணமாக நிந்தவூரில் பல வீதிகள் பாதிப்பு; சீரமைக்க பைசல் காசிம் M.P அவசர நடவடிக்கை!



1
-நிந்தவூர் செய்தியாளர் ஐ.எம்.பாயிஸ்-
அம்பாறை மாவட்டத்தல் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நிந்தவுரின் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக முக்கிய பாதைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் போக்குவரத்துக்களை மேற்கொள்கின்றனர்.
இதனை பிரதேச மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது இன்று காலை அவர் உடன் அவ்விடங்களுக்கு விஜயம் செய்து வீதிகளின் அவல நிலைமைகளை நேரடியாக கண்டறிந்து அவற்றை சீரமைக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக மழை காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அலியான் சந்தி வீதி, அல்மஸ்லம் பாடசாலை வீதி, சர்ஜன் இர்சாத் வீதி போன்ற பாதைகளை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனது சொந்த நிதியில் இருந்து கிரசர் மண் வரவழைக்கப்பட்டு நிந்தவூர் 8ம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூலம் அவரது கண்காணிப்பில் உடனடியாக செப்பனிடப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளில் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் எம் எம் எம் அன்சார் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
3
2

கி.மா கல்விப்பணிப்பாளருடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரின் சந்திப்பு இன்று!


34

மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் அவர்களுடன் இன்று 08.01.2013 (செவ்வாய்க்கிழமை)இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
திருகோணமலை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களப் பணிமனையில் நடைபெறவுள்ள இச் சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் அதிபர், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் புதிய நியமனங்கள், கல்வி வலயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி, கிழக்கு மாகாணச் செயலாளர் எஸ்.சசிதரன், திருகோணமலை மாவட்டச் செயலாளர் பா.தேவராஜா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.அருணாசலம், திருகோணமலை வலயச் செயலாளர் க.யோகானந்தம், பட்டிருப்பு வலயச் செயலாளர் எஸ்.கமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளைய தினம் காலை.11.00 மணிக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர்களையும் சந்திக்கவுள்ளதால் இடர்ப்பாடுகள் உள்ள ஆசிரியர்களை உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் அங்கீகரிக்குமென்றால்; அழிவை தடுக்க முடியாது!


images

-faji-
அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் சுயனலத்திற்காக அங்கிகரிக்குமென்றால் சமூகத்தின் அழிவை தடுக்க முடியாது. கிழக்கு மாகாணத்தையும் அதன் மாவட்டத்தையும் வரையறுத்து அரசியல் நடத்துகின்றவர்கள் தேசிய ரீதியான முஸ்லிம்களின் குரலாக இருப்பது பற்றி தேவை அற்றவர்களாக சிந்திக்கின்றனர்.
தான் சார்ந்த சூழலை திருப்தி படுத்துவதில் முனைப்பு காட்டு கின்றனர். கிழக்கு மாகான முஸ்லிம் அரசியவாதிகளின் இன்றைய போக்கு தூர நோக்கின் அடிப்படையில் பார்க்கின்ற போது கிழக்கு மாகாணத்தையும் நிருவாக நெருக்கடிகள் காவும் என்பது புலப்படுகிறது.
அரசியல் இருப்புக்காக எல்லைகள் அற்ற விட்டுக்கொடுப்புகள் இன்று இல்லாவிடினும் அடுத்த தலைமுறைக்கு பாரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குறைந்த பட்சம் தேசிய அரசியலில் இருக்கின்ற மு. காங்கிரஸ் தனது இஸ்திரதன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதற்கான பயணத்தின் தடைகளை வெளிப்படையாக பேச தயங்குவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
மு.கா விற்குள் இருக்கும் நீறு பூத்த நெருப்பு வெளியில் வரவேண்டும். உண்மை நிலவரம் அடிமட்ட போராளிகள் வரை கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக்கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். கட்சியை காட்டிகொடுக்க நினைப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டால் கட்சி முனேற்றம் அடையும் என்ற நம்பிக்கை தலைமத்துவத்துக்கும் போராளிகளுக்கும் வரவேண்டும்.
சிலரின் கட்சியியின் முக்கிய தொடர் வகிப்பு பதவி மாற்றம் தேவையா? இல்லையா? என்பது பற்றியும்மு.கா போராளிகள் சிந்திக்க வேண்டும்.
தலைவர்கள் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களால் விட்டுசெல்லப்படும் விடயங்கள் மரணிப்பது இல்லை.
அது சமூகத்தின் மீது தாக்கத்தை உண்டுபண்ணும். எனவே தலைவர்களுக்கு ஆரோக்கியமான சிந்தனை அவசியம். தனி மனித பற்று என்ற புற்று நோயை தலைவர்களும் சுயநலம் என்கின்ற புற்று நோயை போராளிகளும் கொண்டிருந்தால் விளைவுகள் அழிவுகளாக இருக்கும்.
அரசியல் வாதிகளை திசை திருப்புவது எது? பொருளாதார ஆசையா ? இறைவனை மறந்த மரணபயமா?.
அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் சுயனலத்திற்காக அங்கீகரிக்குமென்றால் சமூகத்தின் அழிவை தடுக்க முடியாது.

site counter