அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் அங்கீகரிக்குமென்றால்; அழிவை தடுக்க முடியாது!


images

-faji-
அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் சுயனலத்திற்காக அங்கிகரிக்குமென்றால் சமூகத்தின் அழிவை தடுக்க முடியாது. கிழக்கு மாகாணத்தையும் அதன் மாவட்டத்தையும் வரையறுத்து அரசியல் நடத்துகின்றவர்கள் தேசிய ரீதியான முஸ்லிம்களின் குரலாக இருப்பது பற்றி தேவை அற்றவர்களாக சிந்திக்கின்றனர்.
தான் சார்ந்த சூழலை திருப்தி படுத்துவதில் முனைப்பு காட்டு கின்றனர். கிழக்கு மாகான முஸ்லிம் அரசியவாதிகளின் இன்றைய போக்கு தூர நோக்கின் அடிப்படையில் பார்க்கின்ற போது கிழக்கு மாகாணத்தையும் நிருவாக நெருக்கடிகள் காவும் என்பது புலப்படுகிறது.
அரசியல் இருப்புக்காக எல்லைகள் அற்ற விட்டுக்கொடுப்புகள் இன்று இல்லாவிடினும் அடுத்த தலைமுறைக்கு பாரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குறைந்த பட்சம் தேசிய அரசியலில் இருக்கின்ற மு. காங்கிரஸ் தனது இஸ்திரதன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதற்கான பயணத்தின் தடைகளை வெளிப்படையாக பேச தயங்குவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
மு.கா விற்குள் இருக்கும் நீறு பூத்த நெருப்பு வெளியில் வரவேண்டும். உண்மை நிலவரம் அடிமட்ட போராளிகள் வரை கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக்கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். கட்சியை காட்டிகொடுக்க நினைப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டால் கட்சி முனேற்றம் அடையும் என்ற நம்பிக்கை தலைமத்துவத்துக்கும் போராளிகளுக்கும் வரவேண்டும்.
சிலரின் கட்சியியின் முக்கிய தொடர் வகிப்பு பதவி மாற்றம் தேவையா? இல்லையா? என்பது பற்றியும்மு.கா போராளிகள் சிந்திக்க வேண்டும்.
தலைவர்கள் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களால் விட்டுசெல்லப்படும் விடயங்கள் மரணிப்பது இல்லை.
அது சமூகத்தின் மீது தாக்கத்தை உண்டுபண்ணும். எனவே தலைவர்களுக்கு ஆரோக்கியமான சிந்தனை அவசியம். தனி மனித பற்று என்ற புற்று நோயை தலைவர்களும் சுயநலம் என்கின்ற புற்று நோயை போராளிகளும் கொண்டிருந்தால் விளைவுகள் அழிவுகளாக இருக்கும்.
அரசியல் வாதிகளை திசை திருப்புவது எது? பொருளாதார ஆசையா ? இறைவனை மறந்த மரணபயமா?.
அரசியல் வாதிகளின் இரட்டை வேடத்தை சமூகம் சுயனலத்திற்காக அங்கீகரிக்குமென்றால் சமூகத்தின் அழிவை தடுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter