-நிந்தவூர் செய்தியாளர் ஐ.எம்.பாயிஸ்-
அம்பாறை மாவட்டத்தல் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நிந்தவுரின் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக முக்கிய பாதைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் போக்குவரத்துக்களை மேற்கொள்கின்றனர்.
இதனை பிரதேச மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது இன்று காலை அவர் உடன் அவ்விடங்களுக்கு விஜயம் செய்து வீதிகளின் அவல நிலைமைகளை நேரடியாக கண்டறிந்து அவற்றை சீரமைக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக மழை காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அலியான் சந்தி வீதி, அல்மஸ்லம் பாடசாலை வீதி, சர்ஜன் இர்சாத் வீதி போன்ற பாதைகளை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனது சொந்த நிதியில் இருந்து கிரசர் மண் வரவழைக்கப்பட்டு நிந்தவூர் 8ம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூலம் அவரது கண்காணிப்பில் உடனடியாக செப்பனிடப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளில் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் எம் எம் எம் அன்சார் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக