அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 28 நவம்பர், 2012

யாசர் அராஃபத் உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு


பாலத்தீனத் தலைவர் யாசர் அராஃபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை கண்டறியும் முகமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அவரது உடல் ரமல்லாவில் உள்ள கல்லறையில் மீண்டும் புதைக்கப்பட்டது.
அராப்ஃத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை இப்போது வல்லுநர்கள் ஆய்வு செய்வார்கள் என்றாலும், அதன் முடிவுகள் தெரிய பல மாதங்களாகலாம்.
அவரக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத சூழலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாசர் அராஃபத் காலமானார்.
கதிரியக்கத் தாதுப்பொருளான பொலோனியம் அவரது உடைகளில் இருந்தது என்று தொலைக்காட்சி அவணப்படம் ஒன்றில் செய்தி வெளியனதை அடுத்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அவரது மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தது என்று பல பாலத்தீனியர்கள் சந்தேகித்தனர், ஆனால் அதை இஸ்ரேல் எப்போதுமே மறுத்துள்ளது.
அராஃபத்தின் மனைவி வேண்டிக் கொண்டதை அடுத்து அவரது மரணம் குறித்த ஒரு விசாரணை பிரான்ஸில் தொடங்கியுள்ளது. (BBC)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter