தம்புள்ளை பள்ளிவாசலைச் சூழவுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள சுமார் 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு இன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை நகர அபிவிருத்தி மற்றும் புனித பூமி புனர்நிர்மாணம் செய்யும் நோக்கத்திற்காக அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு அதன் உரிமைகாளர்களிடம் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு இதுவரை எவ்வித கடிதமும் வழங்கப்படவில்லை. அதேநேரம், வீதி அபிவிருத்தி தொடர்பான எல்லைக் கல் பள்ளிவாசல் முழுவதையும் உள்ளடக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.