நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில்
கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள்.
-கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-
கல்முனைக் கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் நாளை 30ந் திகதி நிந்தவூர் அல்- அஷ்றக் தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்று நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.