அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

ஹியுமன் லிங் நிறுவனத்தின் சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும்.

      -பிரதம அதிதி மாகாண அமைச்சர் மன்சூர் 4 மில்லியன் ஒதுக்கீடு-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஹியுமன் லிங் நிறுவனத்தின் ஆறு வருட நிறைவையொட்டி நடாத்தப்படுகின்ற சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும் நேற்று மாலை (08.12.2013) மருதமுனை  கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற்பயிற்சி; கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன், சிறுவர் நன்நடத்தை நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் மௌலவி.என்.ஜீ.அப்துல் கமால், ஹியுமன் லிங் தலைவர் கே.முகம்மட் றொசான், தென்கிழக்கப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், சமூக சேவகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

site counter