அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 19 மே, 2014

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில்; சித்திரக் கண்காட்சிக் கூடத் திறப்பு விழா.




( ஏ.எல்.ஏ.றபீக்பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியின் கவின் கலைப் பிரிவினர்; ஏற்பாடு செய்த சித்திரக் கண்காட்சிக் கூடத் திறப்பு விழா இன்று கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


கல்லூரி அதிபர் ஐ.அப்துல் லத்தீப் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சித்திரக் கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைட் , கல்முனை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

பாடசாலை மாணவர்களும், வெளியிலுள்ளோரும் பார்ப்பதற்கான தனித்தனி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் லத்தீப் தெரிவித்தார்.

site counter