அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மேல்கொத்மலை நீரணையின் வான்கதவு திறப்பு

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மேல்கொத்மலை ஓயா ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் தலவாக்கலை நகருக்கு அருகிலுள்ள மேல்கொத்மலை நீரணையில் நீர் மட்டம் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்த நீரணையின் வான் கதவொன்று திறந்து விடப்பட்டது.

இவ்வாறு வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளதால் மேல்கொத்மலைஓயா ஆற்றோரக் கீழ்ப்பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நானுஓயா, ரதல்ல, லிந்துலை பகுதிகளில் தற்போது நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் இந்தப்பிரதேசத்தில் பலமணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மின்பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கினிகத்தெனை - ஹற்றன் பிரதான பாதையிலும் பத்தனை – நாவலப்பிட்டி பிரதான பாதையிலும் ஆங்காங்கே சிறியளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள போதும் வாகனப் போக்குவரத்துகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter