அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

கோதுமை மா விலை அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரூமி மர்சூக்

கோதுமை மாவின் விலையை அதிகரித்த கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியோ அல்லது அங்கீகாரமோ மா உற்பத்திக் கம்பனிகளுக்கு வழங்கப்படவில்லையெனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

'கோதுமை மா உற்பத்திக் கம்பனிகள் தங்களுடைய விருப்பத்திற்கமைய மாவின் விலையை அதிகரிக்கமுடியாது, எவ்வாறாயினும் பிரிமா மற்றும் செரென்டிப் கம்பனிகள் அறிவிப்பின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மா விலையை அதிகரித்துள்ளது.  ஆகையால் இக்கம்பனிகளுக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என அவர் கூறினார்.

இக்கம்பனிகள் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான வேண்டுகோளை முன்வைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் 450 கிராம் நிறையுடைய  ஒரு இறாத்தல் பாணின் விலை 2 ரூபாவால் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார். (ஜயந்த சமரக்கோன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter