(பி.முஹாஜிரீன்)
கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி மீண்டும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தொழிநுட்பக் கல்லூரியின் அதிபர் தொடர்பான சர்ச்சை காரணமாக மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு ஏற்கனவே அதிபராக இருந்த ஏ.ஜி.எம்.தாவூத் மீண்டும் அதிபராக தொழிற் பயிற்சித் திணைக்களப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.றசான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் உட்பட கல்லூரியின் அபிவிருத்திக் குழுவினரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இத்தொழிநுட்பக் கல்லூரிக்கு சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியில் சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றிய இறக்காமத்தை சேர்ந்த ஏ. ஜனூர்தீன் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 19 ம் திகதி முதல் தொழிநுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்படதாகவும் கடந்த வாரம் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்த போதும் 19 ம் திகதி தொழிநுட்பக் கல்லூரி திறக்கப்படாமல் இன்றைய தினமே மீண்டும் ஏ.ஜி.எம். தாவூத் அதிபராக கடமையேற்றதுடன் கல்லூரியும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக