அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 23 நவம்பர், 2012

தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் மாணவனுக்கு ஆரிப் சம்சுடீன் வாழ்த்து!



-எம்.எம்.ஏ.ஸமட்-
தேசிய மட்டப் போட்டியில் இரு பதக்கங்களைப் பெற்று நிந்தவூர் பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை தேடிக் கொடுத்த நிந்தவூர் அல்- மதீனா வித்தியாலய மாணவன் ஆஷிக்கை மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அம்மாணவனின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று வாழ்த்தியுள்ளார்.
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பரிதி வட்டம் வீசும் போட்டில் கலந்துகொண்டு தங்கம் பதக்கத்தினையும் குண்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் இம்மாணவன் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்துக் கிடைத்த ஒரேயொரு தங்கப்ப தங்கம் இம்மாணவனினாலேயே பெறப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கான போதிய வசதிகள் எதுவும் இல்லாத இப்பாடசாலையிலிருந்து போட்டில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தங்கம் பதக்கம் பெற்றது இம்மாணவனின் அயராத முயற்சியும் சாதனையுமாகும்.
பிரசேத்துக்குப் பெருமை தேடிக்கொடுத்த இம்மாணவனி்ன் வீடு தேடிச்சென்று அம்மாணவனுக்கு பரிசில்களும் வழங்கிய மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் இம்மாணவனின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கவுள்ளதாகவும் மாணவனிடம் உறுதியளித்துள்ளார்.
வாழக்கையில் வெற்றிபெறுபவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்துவது மனித நாகரிகமாகும் அதனை மாகாண சபை உறுப்பினர் புரிந்துள்ளமை போற்றத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter