மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் அவர்களுடன் இன்று 08.01.2013 (செவ்வாய்க்கிழமை)இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
திருகோணமலை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களப் பணிமனையில் நடைபெறவுள்ள இச் சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் அதிபர், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் புதிய நியமனங்கள், கல்வி வலயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி, கிழக்கு மாகாணச் செயலாளர் எஸ்.சசிதரன், திருகோணமலை மாவட்டச் செயலாளர் பா.தேவராஜா, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.அருணாசலம், திருகோணமலை வலயச் செயலாளர் க.யோகானந்தம், பட்டிருப்பு வலயச் செயலாளர் எஸ்.கமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளைய தினம் காலை.11.00 மணிக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர்களையும் சந்திக்கவுள்ளதால் இடர்ப்பாடுகள் உள்ள ஆசிரியர்களை உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக