அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2012

கிரீடம் தேடியோர் அரசியல்வாதியின் சகாக்கள்



காசியப்ப மன்னனின் கிரீடத்தைத் தேடி சிகிரியா காட்டில் தேடுதல் நடத்தியவர்கள் அரசியல்வாதியின் சகாக்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரின் சகாக்கள் என பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மன்னனின் கிரீடத்தை தேடும் நடவடிக்கையில் மேற்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தம்புளை அரசியல்வாதியொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் கேகாலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக குறிப்பிட்ட பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter