சவூதி அரேபிய தலைநகர் ரியாத் நகரில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற எண்ணெய்க் கொள்கலன் வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரியாத் நகரின் மேம்பாலமொன்றில் இடம்பெற்ற இவ்விபத்தின் காரணமாக அருகிலிருந்த பல மாடிகளை கொண்ட வணிக கட்டிடத் தொகுதி ஒன்று முற்றாக சரிந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன் இவ்வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக மேலும் பல கட்டிடங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் மினிபஸ் உள்ளடங்களாக பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக