இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்க வேண்டுமென தென்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்னவினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் இது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
40 ஆயிரம் பேர் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் சுற்றுலாத் துறையில் அபிவிருத்திக்கான இந்த தொழில் முக்கியத்துவம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழைக்குமாறும் பொருளாதார அமைச்சிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரியாவிலும், தாய்லாந்திலும் விபசாரத்தை மேம்படுத்துவதன் மூலமே சுற்றுலாத்துறையை முன்னேற்றலாம் என்பதை தாம் அண்மையில் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்தபோது தெரிந்துகொண்டதாக அஜித் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக