அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 டிசம்பர், 2012

நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க வலியுறுத்தி சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்றவிசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அது குறித்து எடுக்க வேண்டிய தீர்மானங்களை ஆராய்வதும் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அதேவேளை நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க வலியுறுத்தி எதிர்வரும் புதன்கிழமை ஒரு மணித்தியாலம் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்ற பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற குழுவினர் நேற்று தமது பணிகளை நிறைவுறுத்தியிருந்தனர்.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுகளில், 5 விசாரிக்கப்பட்டதுடன், அவற்றில் 3 தொடர்பில் பிரதம நீதியரசர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதேவேளை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பல் எதிர்வரும் 13ம் 14ம் திகதிகளில் உயர் நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter