அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 டிசம்பர், 2012

வாழைக்குலைத் திருடனுக்கு வழங்கும் உரிமை கூட பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட வில்லை!


வாழைக்குலைக் கள்வனுக்கு வழங்கும் உரிமை கூட எமது பிரதம நீதியரசருக்கு வழங்கப்படவில்லை என்று ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“வாழைக்குலைத் திருடனுக்கும் விடுதலைக்கான காரணம் கேட்கப்படுவதே சட்டத்துறையின் வழக்கம்.
ஆனால் எமது பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டு பற்றி அவரது விடுதலைக்கான காரணங்களை முன்வைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வில்லை.
இது பிரதம நீதியரசர் மீதான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter