வாழைக்குலைக் கள்வனுக்கு வழங்கும் உரிமை கூட எமது பிரதம நீதியரசருக்கு வழங்கப்படவில்லை என்று ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“வாழைக்குலைத் திருடனுக்கும் விடுதலைக்கான காரணம் கேட்கப்படுவதே சட்டத்துறையின் வழக்கம்.
ஆனால் எமது பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டு பற்றி அவரது விடுதலைக்கான காரணங்களை முன்வைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வில்லை.
இது பிரதம நீதியரசர் மீதான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக