அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 டிசம்பர், 2012

சியோனிசத்திற்கு எதிராகவே போராடுகிறோம் - ஒரு துண்டு நிலத்தையும் விட்டுக்கொடோம்..!




(tn) எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை என்றும் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் காசா விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் முன் தெரிவித்தார்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பங்கேற்ற பேரணியில் ஆவேசமாக உரையாற்றிய காலித் மிஷால், பலஸ்தீனர்கள் ஒரு துண்டு நிலத்தையும் இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றார். “பலஸ்தீனம் எமது தேசம் (மத்தியதரை) கடல் முதல் (ஜோர்தான்) ஆறு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை எனவே அதன் ஒரு துண்டுப் பாகத்தையும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. 

நாம் சியோனிஸத்திற்கு எதிராகவே போராடுகிறோம். யூதர்களுக்கு எதிராகவல்ல. எமது நிலத்தை ஆக்கிரமித்தோருக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். போராட்டத்தின் கனியாக எமக்கு தனிநாடு கிடைக்கும். அது பேச்சு வார்த்தை மூலம் ஏற்படக் போவதில்லை” என்றும் காலித் மிஷால் குறிப்பிட்டார். 

இந்த பேரணியில் முகத்தை மூடியவாறு உரையாற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர், “இஸ்ரேலுடனான மோதலின் போது நாம் எமது 10 வீதமான திறனையே வெளிப்படுத்தினோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter