அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 டிசம்பர், 2012

களுவாஞ்சிக்குடியில் டைனமோ இன்றி செலுத்தப்பட்ட 100 சைக்கிள்கள் பொலிஸாரின் பிடியில்!


களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பொலிஸார் விசேட செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய இரவு வேளையில் மின்னொளியின்றி செலுத்தப்படும் சைக்கிள்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 100 சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அதேவேளை சைக்கிள் உரிமையாளர்களால் டைனமோக்கள் பொருத்தப்பட்ட பின்னர் அவற்றை படிப்படையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு வேளையில் மின்னொளியின்றி செலுத்தப்படுகின்ற சைக்கிள்கள் காரணமாகவே களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிக விபத்துக்கள் இடம்பெற்றமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு கைப்பற்றப்பட்ட சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாது, எனினும் தொடர்ந்து மின்னொளியின்றி இரவு வேளையில் சைக்கிள்கள் செலுத்தப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter