அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2012

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி முயற்சி! பதுளை சம்பவம் குறித்து ஹக்கீம் தெரிவிப்பு!



அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பதுளை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அங்கு சென்றுள்ள ரவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில்,
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன. அவ்வாறானதொரு குற்றப்பிரேரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதமும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளது.
இதன்போது முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இல்லாமல் செய்வதற்காகவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நாம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் அண்மைக்காலமாக பதுளையிலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இதில் ஒரு அங்கமாவே பார்க்கவேண்டியுள்ளது
பதுளையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் கொண்டுசென்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பதுளையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter