(எம்.ஜே.எம். தாஜுதீன்)
கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சருமான மொஹமட் மஹ்ரூப் இன்று (03) காலை மாரடைபினால் காலமானார்.
தமது காரியாலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொழும்பு கிங்ஸ் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபின்னர் அங்கு அவர் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 3:30 மணிக்கு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸாத் தொழுகை கிரேன்ட்பாஸ் அவ்வல் சாவியா பள்ளிவாசலில் நடைபெறம் என குடும்பத்தினர் அறிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக