அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2012

காரியாலயம் செல்கையில் மஹ்ரூப்புக்கு மாரடைப்பு - மாளிகாவத்தையில் ஜனாஸா நல்லடக்கம்



(எம்.ஜே.எம். தாஜுதீன்)

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சருமான மொஹமட் மஹ்ரூப் இன்று (03) காலை மாரடைபினால் காலமானார்.

தமது காரியாலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தவேளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக  கொழும்பு கிங்ஸ் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபின்னர் அங்கு அவர் காலமானார். 

அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 3:30 மணிக்கு மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸாத் தொழுகை கிரேன்ட்பாஸ் அவ்வல் சாவியா பள்ளிவாசலில் நடைபெறம் என குடும்பத்தினர் அறிவித்தனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter