எகிப்து அரசினால் புதிதாக வரையப்பட்டுள்ள அரசியல் அமைப்பை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் தலைவரான செய்க் யூஸுப் அல் கர்ளாவி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பான இறுதி முடிவை மக்களே எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“எகிப்து இவ்வாறான ஓர் அரசியல் அமைப்பை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. மன்னர் ஆட்சிக் காலத்தின் போதோ புரட்சியின் போதோ இவ்வாறான யாப்பு இருக்கவில்லை“ என கர்ளாவி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எகிப்திய மக்களுக்குத் தேவையான கோட்பாடுகளையும் பெறுமானங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், அதனை பின்னர் ஈடு செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பு சபையில் இருந்து வாபஸ் பெற்ற மதச் சார்பற்ற சக்திகளுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்: “நீங்கள் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது. உங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்திருக்கலாம்.“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக