அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 29 நவம்பர், 2012

1300 கி.மீ. தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்தது




MORE VIDEOS
இஸ்லாமாபாத் : அணுகுண்டை தாங்கி சென்று 1,300 கி.மீ. இலக்கை தாக்கும் சக்தி படைத்த புதிய ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்தது. பயிற்சிக்காக ஏவுகணையை சோதனை செய்ததாகவும், சோதனை வெற்றி என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது. காவ்ரி என்று அழைக்கப்படும் ஹாட்ப்,5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் சோதனை செய்தது.

இது இந்தியாவின் உட்பகுதியை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், எங்கிருந்து சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter