இஸ்லாமாபாத் : அணுகுண்டை தாங்கி சென்று 1,300 கி.மீ. இலக்கை தாக்கும் சக்தி படைத்த புதிய ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்தது. பயிற்சிக்காக ஏவுகணையை சோதனை செய்ததாகவும், சோதனை வெற்றி என்றும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது. காவ்ரி என்று அழைக்கப்படும் ஹாட்ப்,5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் சோதனை செய்தது.
இது இந்தியாவின் உட்பகுதியை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், எங்கிருந்து சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இது இந்தியாவின் உட்பகுதியை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், எங்கிருந்து சோதனை செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக