உலகில் வெப்ப நிலை உயர்ந்து வருவதன் காரணமாக கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூமியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால், பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக்குழு ஆய்வின் படி, அக்குழு முன்பு கணித்ததை விட 60 சதவீதம் வேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேவேளை கட்டார், டோகாவில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக வெப்ப மயமாக்கல் குறித்து மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் , கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உறைபனி மலைகள் நிறைந்த நாடுகளில் புவி வெப்ப மயமாவதால் இவைகள் வேகமாக உருகி வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக