அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 26 டிசம்பர், 2012

பௌத்த விகாரையில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பிக்குவுக்கு சிறை


(vi) சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும் சிறுமி க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்தமையினால் பெற்றோர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி தொடர்பாக முறைப்பாடொன்று உள்ளதாகக் கூறி விகாரைக்கு அழைத்துள்ள குறித்த பிக்கு அங்குள்ள அறையொன்றில் வைத்தே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter