அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 25 ஜனவரி, 2014

சாய்ந்தமருது தோனா ஆற்றில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

By Afzal On Friday, Jan 24, 2014
ஏ.எம்.ஆஷிப்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது தோனாவில் இன்று நண்பகல் கரையொதுங்கிய இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது 2ஆம் பிரிவு, காரியப்பர் வீதியைச் சேர்ந்த உதுமாலெப்பை முஹம்மட் அப்சான் என்ற 20 வயது நிரம்பிய இளைஞனின் சடலமே இது என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இந்த இளைஞன் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் தொழில் வாய்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை கட்டார் நாட்டிற்கு பயணிக்க இருந்தார் என்றும் இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரியதொரு பயணப் பையில் கட்டப்பட்ட நிலையிலேயே இவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலத்தில் அடி காயங்களும் காணப்படுகின்றன.

ஆகையினால் இந்த இளைஞன் திட்டமிட்டு- அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இது தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter