களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலை சம்பவத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அது தனிப்பட்ட காரணத்திற்காக செய்யப்பட்ட கொலை என நான் நம்புகின்றேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
“களனி தொகுதி அமைப்பாளர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரினால் நான் தயாராகவே உள்ளேன்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் ஒழுக்கமிக்க கட்சியாகும். எனக்கு களனித் தொகுதியில் 25 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நான் களனி மக்களுக்கு செய்த சேவைகளை நன்கு அறிவர். இதனால் என்னால் களனி மக்களை மறக்க முடியாது.
நான் நீதி நியாயத்திற்காக போராடுபவன். நான் கொலைகாரன் இல்லை. என்னை நம்புங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக