அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

அரசுக்கு எதிராக ஐக்கிய எதிர்க் கூட்டணி உருவாக்கப்படும்: சரத் பொன்சேகா



அரசாங்கத்துக்கு எதிராக மிக விரைவில் ஒன்றுபட்ட ஐக்கிய எதிர்க் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இந்த கூட்டணிக் கட்சியின் தொடக்கப் பேரணி எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, பாலித்த தேவப்பெரும, தயாசிறி ஜயசேகர, மாகாணசபை உறுப்பினர் சிறிலால் லக்திலக்க மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

அத்துடன், முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோரும் அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர் என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter