பதுரளிய பிரதேசத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன 10 வயது சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை குருவிட்ட பிரதேசத்தில் சந்தேகநபரொருவரால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறித்த சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறித்த சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக