அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

இரண்டரை வருடங்களுக்கு முன் காணாமல்போன 10 வயது சிறுமி கண்டுபிடிப்பு



பதுரளிய பிரதேசத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன 10 வயது சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை குருவிட்ட பிரதேசத்தில் சந்தேகநபரொருவரால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறித்த சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter