அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 29 அக்டோபர், 2012

பாரிசவாத நோயினால் வருடாந்தம் 06 மில்லியன் பேர் மரணம்!


உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்.
இலங்கையில் நாளொன்றுக்கு 40-50 பேரளவில் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக பாரிசவாத தினம் இன்று (29) திகதியாகும். இத்தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேற்படி தகவல் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் படி ஆட்கள் பாரிசவாதத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்நாட்டில் ஆஸ்பத்திரிகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணை புரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது.
இதேநேரம் இந்நாட்டில் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இரு மடங்குகள் படி அதிகரித்து வருகின்றது. அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
இந்நாட்டில் 15-59 வயதுக்கு இடைப்பட் டோரின் மரணத்திற்கு துணைபுரியும் காரணிகளில் பாரிசவாதம் 5 வது இடத்தில் உள்ளது.
என்றாலும் உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 06 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இம்மரணங்களில் 80 % வறிய மற்றும் வளர்முக நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
அதேநேரம் மதுப்பாவனை, புகை பிடித்தல் பாவனை தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு உப்பு பாவனையைக் குறைப்பதுடன் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகளவில் உட்கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தினத்தை முன்னிட்டு இலங்கை மருத்துவர்கள் சங்க மண்டபத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பத்மா குணசேகர எழுதியுள்ள பாரிசவாத நிவாரணம் என்ற நூல் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter