கவிஞர். எஸ்.ஜலால்டீன் எழுதிய
'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.
-நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி-
(ஏ.எல்.ஏறபீக் பிர்தௌஸ்)
கவிஞர்.எஸ்.ஜலால்டீன் எழுதிய ' பூப்படைந்த பூக்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று(20) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்றப் ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் , கவிஞர். மன்சூர் ஏ.காதீர், கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்றப் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, நூலின் முதற் பிரதியை நூலாசிரியர், பிரதம அதிதி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கி, நூல் வெளியீடு இடம் பெற்றது.
அதிதிக்கான முதற்பிரதியை இளம் புரவலர் ஏ.சீ.யஹியாக்கானிற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் ' கவிஞர் ஜலால்டீனைப் போன்ற யதார்த்தங்களை தமது மண்வாசனையில் சொல்லக் கூடிய நல்ல கவிஞர்கள் போற்றப்பட வேண்டும். ஊரிற்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தரக் கூடிய இவர்கள்; ஊக்குவிக்கப்பட வேண்டும். இக்கவிஞனின் பேனா முனை இச்சமூகத்தின் விடிவிற்கான ஒழிக்கீற்றை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்' எனப் பிரார்த்திக்கிறேன்.' எனத் தெரிவித்தார்.
'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.
-நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி-
(ஏ.எல்.ஏறபீக் பிர்தௌஸ்)
கவிஞர்.எஸ்.ஜலால்டீன் எழுதிய ' பூப்படைந்த பூக்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று(20) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்றப் ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் , கவிஞர். மன்சூர் ஏ.காதீர், கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்றப் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, நூலின் முதற் பிரதியை நூலாசிரியர், பிரதம அதிதி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கி, நூல் வெளியீடு இடம் பெற்றது.
அதிதிக்கான முதற்பிரதியை இளம் புரவலர் ஏ.சீ.யஹியாக்கானிற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் ' கவிஞர் ஜலால்டீனைப் போன்ற யதார்த்தங்களை தமது மண்வாசனையில் சொல்லக் கூடிய நல்ல கவிஞர்கள் போற்றப்பட வேண்டும். ஊரிற்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தரக் கூடிய இவர்கள்; ஊக்குவிக்கப்பட வேண்டும். இக்கவிஞனின் பேனா முனை இச்சமூகத்தின் விடிவிற்கான ஒழிக்கீற்றை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்' எனப் பிரார்த்திக்கிறேன்.' எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக