அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நிந்தவூரில் சிப்தொற புலமைப் பரிசில், திரியபியச வீடுகள் கையளிப்பு. -பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு-

               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூரில் 'சிப்தொற' புலமைப் பரிசில்> 'திரியபியச' > இலவச வீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி> எம்.சி.பைசால் காசீம்> மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும்  உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்> சமூகசேவைத் திணைக்கள உயரதிகாரிகள்> பிரதேச செயலக அதிகாரிகள்> பாடசாலை அதிபர்கள்>மாணவர்கள்> பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு நாம் என்றும் ஆதரவாக  இருப்போம். ஏழை மக்களின் வாழ்வில் ஒழியேற்றக் கூடிய சிப்தொற புலமைப்பரிசில்>'திரியபியச'  இலவச வீடுகள் போன்றவற்டறை வழங்கிவரும் அரசைப் பாராட்ட வேண்டும்' எனத் தெரிவித்தார்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter