அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 11 டிசம்பர், 2013

உயர்கல்விக்காக கெய்ரோ பயணம்


( V.vy;.V.wgPf; gph;njs]; )
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாபிழ்- மௌலவி யு.சு.முஹம்மது ஆதில் (ஷர்கி) அவர்கள் கெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்; 2013-2014ம் ஆண்டிற்;கான  புலமைப்பரிசிலைப் பெற்று ஷரிஆ கற்கை நெறியை மேற்கௌ;வதற்காக எதிர்வரும் (டிசம்பர்)14ம் திகதி கெய்ரோ பயணமாகவுள்ளார்.
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் கல்வி கற்று 2012ம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்ற இவர் கடந்த 2008ம் ஆண்டில் லண்டன் மாநகரில் நடைபெற்ற அல்குர்ஆன்; மனனப் போட்டியிலும்  கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டுக்கும் அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் இலங்கைக்கான எகிப்திய தூதுவராலயத்தில்;; 65 மௌலவிமார்கள் கலந்து கொண்ட 10பேரைத் தெரிவு செய்யும் நேர்முகப்பரீட்சையில் நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ் மௌலவி  யு.சு.முஹம்மது ஆதில்(ஷர்கி)அவர்கள் இரண்டாவதாக தெரிவானவர் என்பதும், அம்பாரை மாவட்டத்தில் இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.






மேலும்;, உயர்ந்த குணமும் சிறந்த குரல் வளமும் கொண்ட இவர் நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்ஹாஐ; மௌலவி அப்துல் றஷீது ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஹாஜியானி ஆமினா அப்துல் றஷீது தம்பதிகளின்  கனிஷ்ட புதல்வரும், ரு.முயில் வசிக்கும் யு.சு. முஹம்மது அறபாத்தின் சகோதரருமாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter