அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல். -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல்.
              -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி ஹரன் பெரேரா தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ஜென்ரல் லால் பெரேரா, காரைதீவு 631வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் பிரியந்த கமகே, அம்பாரை மாவட்ட இராணுவ சிவில் பொறுப்பதிகாரி மேஜர் நவரெட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், சிவில் பாதுகாப்புக் குழுவினர் போன்றோருடன் தற்கால பாதுகாப்பு நிலவரமும், முஸ்லிம் பிரதேசங்களும் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் பற்றி ஆராயும் உயர்மட்ட மாநாடு.


           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்ப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை ஆராய்ந்து, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்மட்ட மாநாடு இன்று நிந்தவூர்ப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க, காரைதீவு 631வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி கேணல்.பிரியந்த கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இம்மாநாட்டில் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.எம்.றியாஸ், கிராம சேவகர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க ' யாரோ இனந்தெரியாத சிலர் அண்மைக் காலங்களாக நிந்தவூர்ப் பிரதேசத்தில் மக்களின் அமைதியைக் குலைத்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிச்சயமாக இவர்கள் தூர இடங்களிலிருந்து வர முடியாது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்களைப் பிடிக்க பொது மக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும். பொது மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது. சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கவே பொலிசார் இருக்கின்றனர். இவ்வாறான விடயங்களில் பொலிசாரைச் சந்தேகங் கொள்ளக் கூடாது. மக்களுக்கும், பொலிசாருக்குமிடையில் நல்லுறவு பேணப்பட வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டார்.










செவ்வாய், 19 நவம்பர், 2013

நிந்தவூரின் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் ஜெமீல் அவசர பிரேரணை!

Jameel (6)

(அஸ்லம் எஸ்.மௌலானா)
நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாராண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை அமர்வில் அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்விலேயே அவர் இந்த அவசர பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

திங்கள், 18 நவம்பர், 2013

நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு. இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு. கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.


நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு.


இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு. 

கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.

கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.

நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்றிரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட குழுவினர் பாதுகாப்பு தரப்பினர் என அடையாளம் கண்டுள்ளனர்.


ஞாயிறு, 17 நவம்பர், 2013

'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை நிகழ்வு நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் இடம் பெற்றது.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு இன்று (15) நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் (ஐ.சு.ஜ.மு) வை.எல்.சுலைமா லெவ்வை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் 'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் ஏற்பாட்டிலான தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு
இன்று (15) நிந்தவூர் அல்லி மூலைச் சந்தியில் இடம் பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமிறுல் பாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரங்களை நட்டி வைத்தார்.

நிந்தவூரில் ஜனாதிபதியின் "தேசத்திற்கு நிழல்" மரநடுகை விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
 
அதிமேதகு ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(15)  நாடு முழுவதும் நடைபெற்ற 'தயட்ட செவன' (தேசத்திற்கு நிழல்)  தேசிய மரநடுகை விழா நிந்தவூரிலும்  சிறப்பாக நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹாநாயக்க> நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி;.எம்.மாஹீர்> கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு> மரங்களை நட்டி வைத்தனர்.  

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவு

பொதுநலவாய நாடுகளின் 22வது அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த மாநாட்டுக்கான பணிகள் கடந்த 10ம் திகதி முதல் இடம்பெற்று வந்தன.

இதன்படி ஹம்பாந்தொட்டையில், பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு நடைபெற்றிருந்தது.

அத்துடன் காலியில் பொது மாநாடு நடைபெற்றது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இடம்பெற்றது.

இதில் 2000க்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டளர்கள் பங்குபற்றி இருந்தனர்.

உருளை கிழக்கு வரி குறைப்பு



உருளைக்கிழக்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றின் இறக்குமதி வரிகள் இன்று முதல் குறைக்கப்பட உள்ளன.

நிதியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதன்படி, இறக்கமதி செய்யப்படும் விதை உருளைக்கிழக்கு கிலோ ஒன்றுக்கான இறக்குமதி வரி 30 ரூபாவாலும், பெரிய வெங்காயத்தின் வரி 25 ரூபாவாலும், சிறிய வெங்காத்திற்க வரி 10 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

புதன், 13 நவம்பர், 2013

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச பாடசாலை மாணவர்களிடத்தில் பசும் பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ்> பாடசாலை மாணவர்களிடத்தில் பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கம் நிகழ்வு நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர்> நிந்தவூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி ஏ.தையூபா ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

நிந்தவூர் அல்-மதீனா ம.வி ஆசிரியைகளின் பிரச்சினைக்குத் தீர்வு. பிரதிக்கல்விப் பணிப்பாளர் முக்தாரிற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டு!

( சௌத்துல் உம்மத் )

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013.11.30;ந் திகதி இரு ஆசிரியைகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையும், அதன் பின்னரான குழப்பங்களும் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனை மிகச் சாதுரியமாக கையாண்டு, இரு ஆசிரியைகளையும் ஒற்றுமைப்படுத்தி, சலாம் சொல்ல வைத்த கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 7 நவம்பர், 2013

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க டிப்ஸ்

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க டிப்ஸ்

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது.

கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தில் நிந்தவூரில் 56 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு. -பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹசன் அலி, பைசால் காசீம் பங்கேற்பு-

k`pe;j rpe;jid Ntiyj; jpl;lj;jpy;
epe;jT+upy; 56 gl;ljhupg; gapYdh;fSf;F epue;ju epakdq;fs; toq;Fk; epfo;T.
-ghuhSkd;w cWg;gpdh;fs; `rd; myp> igrhy; fhrPk; gq;Nfw;G-
           ( V.vy;.V.wgPf; gph;njs]; )

k`pe;j rpe;jid Ntiyj; jpl;lj;jpd; fPo; epe;jT+h; gpuNjr nrayfj;jpy; gl;ljhupg; gapYdh;fshfg; gzpahw;wp te;j 56 gl;ljhupfSf;F epue;ju epakdq;fs; toq;Fk; epfo;T ,d;W (06)epe;jT+h; gpuNjr nrayf Nfl;Nghh; $lj;jpy; ,lk; ngw;wJ.
gpuNjr nrayhsh; jpUkjp.wpgh ck;kh [yPy; jiyikapy; eil ngw;w ,e;epfo;tpy; ghuhSkd;w cWg;gpdh;fshd vk;.up.`rd; myp> vk;.rp.igrhy; fhrPk; MfpNahh; mjpjpfshff; fye;J nfhz;L> gl;ljhupfSf;F epakdf; fbjq;fis toq;fp itj;jdh;.
NkYk; ,e;epfo;tpy; gpuNjr rig cWg;gpdUk;>`rd; myp vk;.gpapd; nrayhsUkhd vk;.up.[g;ghh; myp> cjtpg; gpuNjr nrayhsh; Mh;.jputpauh[;> cjtpj; jpl;lkply; gzpg;ghsh; V.vk;.Ry;gpfhh; myp> cjtp khtl;lg; gjpthsh; ,]l;.e#Wj;jPd; MfpNahh; nfsut mjpjpfshfTk; fye;J nfhz;ldh;.

புதன், 6 நவம்பர், 2013

அம்பாரை மாவட்டத்திலுள்ள பல குழங்கள் மாகாண அமைச்சர் உதுமாலெவ்வையினால் புனரமைப்பு. அவற்றைநேரில் பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு...!

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்திலுள்ள பல குழங்கள் கிழ
க்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் அயராத முயற்சியினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது.
மத்திய நீர்பாசனத் திணைக்களமும், கிழக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களமும் இணைந்து அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு, வள்ளக்குண்டு வடிச்சல், இப்றாகீம் பள்ளம், முகத்துவாரம், மீனோடைக்கட்டு வாய்க்கால்களின் அபிவிருத்திப்பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
'இந்த ஆற்றிற்குச் சொந்தமான எல்லைகளைச் சிலர் அடைத்து வைத்துக் கொண்டு, சொந்தம் கொண்டாடுவதால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் சில தற்காலிகத் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும், இவர்களின் இச்செயற்பாட்டினால்  கிராமத்தின் எழில் குன்றிப்போவதோடு, பல்வேறு நீர்வள,நிலவள நன்மைகள் இல்லாமல் போய் விடுகின்றன. எனவே, இவற்றைச் செய்பவர்கள் எதிர்கால சமூகத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டு செயற்படவேண்டும்.' என அமைச்சர் உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் உதுமாலெவ்வையினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப்பணிகளையும், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் நேரில் சென்று பார்வையிடுவதற்ககான வாய்ப்புக்கள் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் மாகாண சபை வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, மத்திய நீர்பாசனப் பொறியியலாளர் எம்.இசட்.எம்.டபிள்யூ.இப்றாஹீம், மாவட்டச் செயலக திட்டப் பணிப்பாளர்ஐ.எல்.தௌபீக், மாகாண சுற்றாடல் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஐPப், கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜெஸுர் , அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




திங்கள், 4 நவம்பர், 2013

லொயிட்ஸ் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை நடாத்திய அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண சபை அமைச்சரவைப் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அக்கரைப்பற்று மத்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர்

ஞாயிறு, 3 நவம்பர், 2013

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து உயிராபத்து இல்லை

(vi)

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் பாரிய பஸ் விபத்தொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பதவி விலக மாட்டேன் தொடர்ந்தும் பதவி வகிப்பேன் ; சிராஸ் சூளுரை

(tw)
கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாதெனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கப் போவதாக சிராஸ் மீராசாஹிப் சூளுரைத்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப், கட்சியின் தீர்மானத்துக்கமைவாக மேயராகப் பதவியேற்றார்.
எனினும் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்டு அதற்கடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அடுத்த இரண்டு வருடங்கள் பதவி வகிப்பாரென கட்சித் தலைமை அப்போதே அறிவித்திருந்தது.

அரசியல் சுயநலத்தில் அடைகாக்கப்படும் குஞ்சுகள்


(கத்தாரிலிருந்து தாஸீம்)

அண்மைக்கால கல்முனை அரசியல் சாணக்கியத்தில் சற்று பலத்த காற்று வீசிக்கொண்டிருப்பதை எம்மால்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது சமூகத்தின் ஒற்றுமைக்கும் அதன் தார்மீகக் கோட்பாடுகளுக்கும் எவ்வாறான பாதிப்பை இந்த அரசியல் வீர விளையாட்டுக்கள் உண்டாக்கியுள்ளன என்பதை நாம் அலசும்போது குறிப்பாக மக்களிடையே துவேசக் கருத்துக்களை விதைப்பதன் மூலம் தமது இருப்புக்களை தக்கவைக்க பாடுபடுகின்றமை இங்கு புலனாகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை குழப்பத்தை ஏற்படுத்துகின்றதா..?

ஊர் குழம்பினாதான் உடையாருக்கு வேட்டை  என்று கிராமத்தவர்கள் கூறும் பழ மொழியை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்  உண்மைப்படுதுகின்றது.  ஊர் குழம்புவதற்கு   ஊரில்  உள்ள அரசியல்  வாதிகளை  குறிப்பாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சி  அரசியல் வாதிகளை  கட்சி தலைமைத்துவம் பிளவு படுத்தி அழகு பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு  ஊருக்கும்  இரண்டு பேரை நிரந்த இணக்கமில்லாதவர்களாக வைத்துக் கொண்டுள்ளது  இதன் மூலம் தன்னையும் தன் செயலையும்  மறைக்கும் அரசியலை  தலைமைத்துவம் செய்ய முனைகின்றது.

கிழக்கில் ராணுவ ஆட்சியா? அடியோடு மறுக்கிறார் ஹிஸ்புல்லாஹ்!

Hizbullah

கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்; “கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. காணி, பூமி, மேய்ச்சல், விவசாயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத் தலையீடு உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா “உங்களின் இந்த கூற்றை மறுக்கின்றேன்- இங்கு இராணுவ ஆட்சி நடைபெறவில்லை. நீங்கள் அரசியல் செய்வதற்காக இவற்றை கூறுகின்றீர்கள். உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
“இங்கு சிவில் நிருவாக ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்ற கூற்றை முற்றாக நான் மறுக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதியைமச்சர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ஆகியோருக்கு இடையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
S:MM

சனி, 2 நவம்பர், 2013

எயர் அராபிய விமானத்தில் குழந்தை பிரசவித்த இலங்கை பெண் (வீடியோ இணைப்பு)

துபாயிலிருந்து இலங்கையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயர் அராபிய விமானத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்த சம்பவமொன்று (31-10-2013) இடம்பெற்றுள்ளது 

விமானத்தை அவசரமாக ஓமானில் தரையிறக்கி அப்பெண்ணையும் குழந்தையையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்ததாம்.

துபாயில் பணிப்பெண்ணான இந்த கர்ப்பிணிப் பெண், இவ்விமானத்தில் இலங்கைக்கு வரும் போது மேல் வானில் ஏற்பட்ட பிரசவ வலி ஏற்படவே விமானத்தில் இருந்த பணியாட்கள்  மற்றும் இலங்கை பனிப் பெண் ஒருவர் அருகில் இருந்துள்ளனர்.  


Source:Jaffna Muslim

நிந்தவூரில் கல்முனை வலய சுற்றாடல் பொறுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வு. -கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் பிரதம அதிதி-

         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனைக் கல்வி வலயப் பாடசாலைகளில் உருவாக்கப்பட்ட சுற்றாடற் கழகங்களின்  பொறுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வொன்று இன்று (01) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

கல்முனைக் கல்வி வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

site counter