13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றக் குழு அறையில் இடம்பெறவுள்ளது.
ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மிகவும் துணிச்சலுடன் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் ஆளும் மற்றும் எதிரணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், முஸ்லிம் எம்.பி.க்களுக்குப் புறம்பாக இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள எம்.பி.க்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதரவை வெளிப்படுத்துவர் என்று அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக