அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

உம்ராவுக்கு செல்வோரும் முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்!



-அஸ்ரப் ஏ சமத்-
உம்ரா கடமையை நிறைவேற்ற மக்கா செல்வோரும் முஸ்லிம் சமய திணைக்களத்தின் பதிவு செய்தே செல்ல வேண்டும். இவர்களை கூட்டிச் செல்லும் முகவர்களும் திணைக்களத்தில் பதியப்படல் வேண்டும். இது சம்பந்தமாக அடுத்த வாரம் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்படும் என்று சிரேஸ்ட அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.
அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இவ்வருடம் ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக 6245 போ் முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 3500 போ் இவ்வருடம் சென்று விட்டனர்.
2013 ஆம் ஆண்டுக்குச் செல்வோருக்கான பதிவு 3501 ஆம் இலக்கத்தில் இருந்து ஆரம்பமாகும்.
இவ்வருடம் 2800 பேருக்கே ஹஜ் செல்லுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த்து. ஆனால், எமது செல்வாக்கு மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவராலயத்தின் ஒத்துழைப்பினால் மேலும் 500 பேருக்கு விசா கிடைத்தது.
இவர்கள் ஹஜ் பயண தங்குமிட கட்டனத்திற்காக முகவர்களுக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ருபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என சொல்லியிருந்தோம். ஆனால், சில முகவர்கள் 5, 6, 7 இலட்சம் அறிவிட்டுள்ளனர். சில பதிவு செய்தவர்கள் அந்தப் பதிவுகளை 50 அல்லது 1 இலட்சம் ருபாவுக்கு விற்றுள்ளனர்.
இவ்வாறு கூடிய பணம் செலுத்தியவர்கள் எழுத்து முலமாக திணைக்களத்திற்கு முறையிட முடியும். இதுவரை எவ்வித முறைப்பாடும் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை. அவ்வாறு யாராவது முறையிட்டால் அவர்களை இடை நிறுத்த முடியும்.
அறபு நாடுகள் நோன்பு காலத்தில் இலவசமாக வழங்கும் ஈத்தம் பழத்திற்கு அரசு வரி அறிவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இது வரியல்ல vat & Pal இது அத்தியவசியமாக எந்தப் பொருளையும் இறக்குமதி செய்வதென்றால் இதனைச் செலுத்தியாகவே வேண்டும். இதனை திணைக்களமே செலுத்துகின்றது. இப் பணம் அரசுக்கே செல்கின்றது.
அடுத்த வருடம் (2013) ஹஜ் கடமை நிறைவேற்றுவருக்கு முகவர்களாக அரசாங்க திணைக்களம் ஊடாக செயற்படுவதற்கு என முஸ்லிம் அமைச்சர்களுடனும் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் பௌசி மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நவவி; முஸ்லிம் திணைக்களத்தின் கட்டிடத்தை அரசே நிர்மாணிக்கின்றது. இக்கட்டிடத்தை நிர்மாணிக்க எந்தவொரு நாட்டில் இருந்தும் பணம் கிடைக்கவில்லை. திரைசேரி 2011 இல் 129 மில்லியன் ருபாவும் 2012 இல் 144 மில்லியன் ருபாவும் இம்முறை பஜட்டில் 180 மில்லியன் ருபாவையும் ஒதுக்கியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter