தயட்ட செவண “தேசத்திற்கு நிழல்” மர நடுகை விழா இன்று வியாழக்கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், பிரதித் தவிசாளர் எம்.எம்.எம்.அன்சார், பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் சுலைமாலெப்பை, பிரதேச சபையின் உறுப்பினர்கள், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் தௌபீக், நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அல்ஹாஜ் Dr முனீர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், மௌலவிமார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் “நிந்தவூரை பசுமையாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சுமார் 50 மரங்கள் பிரதான வீதியில் நடப்பட்டன. பிரதான வீதியில் மரம் நடுகைக்கான அனுமதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் அல் ஹாஜ் ALM நிசார் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக