அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

நிந்தவூரில் ‘தேசத்திற்கு நிழல்’ மர நடுகை வைபவம்!



தயட்ட செவண “தேசத்திற்கு நிழல்” மர நடுகை விழா இன்று வியாழக்கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், பிரதித் தவிசாளர் எம்.எம்.எம்.அன்சார், பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் சுலைமாலெப்பை, பிரதேச சபையின் உறுப்பினர்கள், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் தௌபீக், நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அல்ஹாஜ் Dr முனீர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், மௌலவிமார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் “நிந்தவூரை பசுமையாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சுமார் 50 மரங்கள் பிரதான வீதியில் நடப்பட்டன. பிரதான வீதியில் மரம் நடுகைக்கான அனுமதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் அல் ஹாஜ் ALM நிசார் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter