அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

காஸா-இஸ்ரேல் மோதல்: 15 பலஸ்தீனியர்கள், 3 இஸ்ரேலியர்கள் பலி!


-MJ
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இதுவரைக்கும் 15 பலஸ்தீனியர்களும், 3 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்களுள் ஹமாஸ் இயக்கத்தின் கொமாண்டர் அகமட் ஜபாரி என்பவரும் உள்ளடங்கியிருக்கின்றார்.
புதன்கிழமை காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய குடியேற்ற தொடர்மாடி ஒன்றில் விழுந்ததால் 3 இஸ்ரேலியர்கள் உடன் பலியாகி இருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக இன்று காலை இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் காஸாவில் இடம்பெற்றன. இதில் சிறுவர்கள், குழந்தைகள் உட்பட மேற்படி 15 பேர் பலியாகி இருக்கின்றனர்.
‘நாங்கள் மேற்கொண்டு எதனையும் செய்வோம்’ என இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாகு கர்ஜித்திருக்கின்றார்.
இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை எகிப்தின் ஜனாதிபதி அகமட் முர்ஸி காஸாவிற்கு சமாதான விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter