அரிப்பு, குமட்டல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்றும் 90 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலங்கொடை வெலிகேபொல ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போதே ஆரம்ப பிரிவு மாணவர்கள் இவ்வாறான உபாதைகளுக்கு முகம்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஒவ்வாமை காரணமாக கம்பளையை சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக