அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

நாட்டில் இன்று மீண்டும் சிவப்பு மழை - உடனடியாக மருத்துவ ஆய்வும் ஆரம்பம்


பொலன்நறுவை, மனம்பிட்டிய பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை  சிவப்பு மழை பெய்துள்ளது. இதேவேளை செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்தில் நேற்று சிவப்பு மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

செவனகல மற்றும் மன்னம்பிட்டி பகுதிகளில் பெய்த சிவப்பு மழை தொடர்பில் மருத்துவ ஆய்வு நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. ஆய்வுகளுக்கான நீர் மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அணில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் நிலைமை எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மன்னம்பிட்டி பகுதியில் இன்றும் செவனகல பகுதியில் நேற்றும் பெய்த இந்த சிவப்பு மழைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்திலும் அண்மையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதாகவும் அதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter