அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நிந்தவூரில் இடம்பெற்ற 66வது சுதந்திர தின நிகழ்வுகள். (பிரத்தியேகப் படங்கள்)

(சுலைமான் றாபி)
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தினையொட்டி இன்று (04.02.2014) நிந்தவூரின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.  அந்த வகையில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளை  ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வு அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு அதன் அலுவலக வளாகத்திலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச சபையிலும் , மாவட்ட தொழிற்பயிற்சி  அதிகார சபையிலும் இடம்பெற்றன. 

இதேவேளை இந்த சுதந்திர நிகழ்வின் சிறப்பம்சமாக பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட சுதந்திர தின ஊர்வலமும் இந்நிகழ்வுகளை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter