.jpg)
சம்மாந்துறையின் கல்வியை மேலோங்கச் செய்யும் அதிபர்கள் மாநாடு.
-மாகாண அமைச்சர்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறையின் கல்வியை மேலோங்கச் செய்யும் அதிபர்கள் மாநாடு நேற்று ( 28 ) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, சுகாதாரம்,மற்றும் தெழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இம்மாநாட்டில் மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் ஏ.எம்.நௌஷாட், மாகாண கல்விச் செயலாளர் புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், வலயக் கல்விப் பணிப்பாளர்களான யூ10.எல்.எம்.ஹாஸீம், எம்.எஸ்.எம்.ஜலீல்,உமர் மௌலானா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும், பிரதேச அதிபர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' வீழ்ச்சியடைந்துள்ள சம்மாந்துறையின் கல்வியை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை நாமெல்லோரும் தலைமேல் சுமந்துள்ளோம். கல்வியை வளர்க்கும் பணியில் எந்தவிதமான மோசமான அரசியல் தலையீடுகளையும் நாம் செய்யமாட்டோம். அவரவர் கடமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்து செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்' என்று தெரிவித்தார்.
'நமது நாடு, நமது பாடசாலை, நமது பிள்ளைகள், நமது சமூகம், நமது கல்வி எனச் சிந்தித்துச் செயற்பட்டால், எல்லாச் சமூகங்களும் கல்வியில் முன்னேற்றமடைய முடியும்.' என மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
Visual:
Samma. Principal & Minister’s Meeting.
Ampara
Rafeek.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக