-பிரதம அதிதி பைஸால் காசீம் எம்.பி- ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாலயமும்> ஐ.ரி.கெம்பசும் இணைந்து நடாத்திய பட்டமளிப்பு (சான்றிதழ் வழங்கும்) விழா இன்று (02.02.2014) நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெறறறது.
ஐ.ரி.கெம்பசின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.முஜிபுர் றகுமான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்> நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாலயமும்> ஐ.ரி.கெம்பசும் இணைந்து நடாத்திய பட்டமளிப்பு (சான்றிதழ் வழங்கும்) விழா இன்று (02.02.2014) நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெறறறது.
ஐ.ரி.கெம்பசின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.முஜிபுர் றகுமான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்> நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 1100 இளைஞர்> யூவதிகளுக்கு பட்டங்களும்> சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ' இன்றுள்ள இளைஞர்கள் கல்விமான்கள்> அறிஞர்களின் அறிவுரைகளைச் செவிமடுக்காத காரணத்தினால்தான் இன்று இலங்கையில் தொழில் பெற முடியாமல்> சவூதி போன்ற நாடுகளைத் தேடி ஓட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே நமது இளைஞர்கள் கல்வியில் கூடிய கரிசனை காட்ட வேண்டும். வுழிகாட்டுகின்றவர்களை மதித்து நடக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக