மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும் சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்கும் திவிநெகும வழி வகுக்கும் என்று பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா தெரிவித்தார்.
இதன் காரணமாகவே திவிநெகும சட்ட வாக்கெடுப்பில் தான் எதிர்த்து வாக்களித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும், சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்குமான சட்டமாக திவிநெகுமவை கருதியதாலேயே நான் எதிர்த்து வாக்களித்தேன்.
திவிநெகும சட்ட மூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது என்பதால் அதனை சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்த்து முறியடித்திருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக