அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 9 ஜனவரி, 2013

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கே திவிநெகும வழி வகுக்கும்!


Sri Ranga

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும் சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்கும் திவிநெகும வழி வகுக்கும் என்று பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா தெரிவித்தார்.
இதன் காரணமாகவே திவிநெகும சட்ட வாக்கெடுப்பில் தான் எதிர்த்து வாக்களித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும், சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்குமான சட்டமாக திவிநெகுமவை கருதியதாலேயே நான் எதிர்த்து வாக்களித்தேன்.
திவிநெகும சட்ட மூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது என்பதால் அதனை சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்த்து முறியடித்திருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter