இடமாற்ற சபையின் அனுமதியின்றி கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் உறுதியளித்துள்ளார்.
ஆசிரியர் தொழிற் சங்கங்களிற்கும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவை செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது பற்றி முன்னரே குறித்த வலயக் கல்வி பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் குறித்த ஆசிரியர் தன்னை தயார்படுத்திக் கொள்வதோடு தனக்கு பொருத்தமான பாடசாலைகளுக்கு அவர் விண்ணப்பம் செய்யவும் வசதியாக இருக்கும்’ என தொழிற் சங்கங்கள் தெரிவித்தன.
இதனை மாகாண கல்வி பணிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம ஆகிவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக