அனுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் இன்று அதிகாலை சிங்கள கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அப்பள்ளிவாசலின் கூரைப் பகுதி உடைத்து அகற்றப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை மல்வத்து ஓயா பள்ளிவாசலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தேசிய முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருப்பதாக அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசலை அகற்றுமாறு கோரியும் அப்பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளிவாசல் கடந்த நவம்பர் மாதம் எரிக்கப்பட்டு சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக