அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 9 ஜனவரி, 2013

மல்வத்து ஓயா பள்ளிவாசல் உடைப்பு; பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தேசிய முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

Metro_Breaking News1

அனுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் இன்று அதிகாலை சிங்கள கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அப்பள்ளிவாசலின் கூரைப் பகுதி உடைத்து அகற்றப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை மல்வத்து ஓயா பள்ளிவாசலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தேசிய முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருப்பதாக அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசலை அகற்றுமாறு கோரியும் அப்பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளிவாசல் கடந்த நவம்பர் மாதம் எரிக்கப்பட்டு சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter