அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 20 நவம்பர், 2012

காதி நீதி முறை விரைவில் சீர்திருத்தப்படும் – நீதியமைச்சர் ரவூப் ஹகீம்


-அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையின் பண்நெடுங்காலமாக  முஸ்லீம் காதீ நீதிமன்ற முறை நடைமுறையில் உள்ளது. இச் சட்டத்தினை மீள மாற்றவேண்டி உள்ளது. அதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் இச் சட்டத்தினை மாற்றியமைப்பதற்கு குழு ஒன்று இயங்குகின்றது. மிக விரைவில் முஸ்லீம் காதி நீதிமன்ற  சட்டத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து அதனை நடைமுறைப்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. என நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏறாவூர் ஸர்மிலா செய்யத்தின்  சிறகு முளைத்த பெண் கவிதை நூல் வெளியீட்டு வைபவம்  நேற்று (18) கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு டாக்டர் தி.ஞாணசேகரன் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுக உரையை  பலாலி ஆசிரியர் கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ. பத்மநாதனும் நூல் ஆய்வினை சட்டததரணி கவிஞர் மர்ஸூம் மௌலானாவும் சாந்தி சச்சிதானந்தன்  என்.எம் அமீன் ஆகியோறும் வாழ்த்துரை  வழங்கினார்கள்  நூலாசிர் ஐனாபா ஸர்மிலா செய்யத் ஏற்புரை நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதியமைச்சரும்  முஸ்லீம் காங்கிரஸின் தலைவருமான  றவுப் ஹக்கீமிடமிருந்து கவிஞரும் டொக்டர் தாசீம் அகமத் பெற்றுக் கொண்டார்கள்.
இவ் விழாவின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர்சேகுதாவுத் புரவலர் ஹாசிம் உமர் உட்பட இலக்கியவாதிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter