அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 20 நவம்பர், 2012

சிரியா குழந்தைகள் கடும் குளிரில் பாதிப்பு - பாதுகாக்க தொண்டுநிறுவனங்கள் அழைப்பு




சிரியாவின் உள்நாட்டுக்கு போருக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனன் மற்றும் ஜோர்டன் நாடுகளின் எல்லையில் அகதிகளாக தங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கான போதுமான தங்குமிடமும் உடைகளும் இன்றி தவித்து வருகின்றனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது மிகக் கடும் குளிர் காலம் நெருங்கி வருகிறது. இதிலிருந்து அவர்களை காக்க போதுமான உதவிகள் தேவை. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தங்கியுள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தொண்டு நிறுவனத்தினர் எச்சரித்துள்ளனர்.

டமாஸ்கஸ், அலெப்போ என முக்கிய நகரங்களில் அதிபர் - புரட்சிப் படையினரிடையே தீவிர சண்டை நடக்கிறது. இதனால் இதுவரை 4,00,000 லட்சம் பேர் அகதிகள் என்பது இந்த வருட இறுதிக்குள் அது 7,00,000 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. எச்சரிக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter